என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, September 5, 2009

புகை (சிறுகதை)


பஸ் ஸ்டாண்டில் காலியாக இருந்த பஸ்சுக்குள் ஏறி ஜன்னல் ஓரமாய் உட்கார இடம் கிடைத்ததில் என்னவோ என் குழந்தைக்கு எல்.கே.ஜி-யில் சேர ஸீட் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி எனக்கு.
கொஞ்சம் கொஞ்சமாய் பஸ் நிரம்ப பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவராய் வந்து காசு வாங்கிக்கொண்டு போனார்கள். டிரைவர்களோ சீட்டுக்கட்டுக்களை அடுக்கி தள்ளிவிடும் விளையாட்டு மாதிரி பஸ்களை நெருக்கமாக நிறுத்தி இருந்தார்கள்.

அழுக்கு லுங்கியுடனிருந்த ஒருவன் இரண்டு பஸ்களுக்கிடையில் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் நின்றிருந்த இடம் போயும் போயும் என்னோட ஜன்னலுக்கு கீழேதான் இருக்க வேண்டுமா? சிகரெட் புகையை நான் கேட்காமலேயே சுவாசிக்க அனுப்பிக் கொண்டிருந்தான்.

தலையை வெளியே நீட்டி அவனிடம் " சார் அப்படி எங்கேயாவது போய் சிகரெட் பிடிக்கக்கூடாதா? " என்று நான் கேட்க--

" தோடா பஸ்சுக்குள்ளார புடிக்க கூடாதுங்கராங்கலேன்னு வெளியே நின்னு பிடிச்சா பெரீசா கேட்க வந்துட்டியே, ஏன் நீ தள்ளி உட்காரு "

" இதுவும் பப்ளிக் இடம் தான். இங்கெல்லாம் சிகரெட் பிடிக்கக் கூடாது "

" யேய் என்னா? என்னான்ர இப்ப?" மிரட்டலுடன் அவன் கேட்கவும் மௌனமானேன்.

என்னை வென்றுவிட்ட நினைப்பில் அலட்சிய பார்வையினை என்னை நோக்கி வீசியவன் மற்றவர்களை பார்த்து சிரித்தவாறே புகை பிடிப்பதை தொடர்ந்தான். பஸ்சுக்குள்ளிருந்தவர்கள் இதை கண்டும் காணதவர்கள் போல படிப்பதிலும் மொபைலிலும் மும்முரமாய் இருந்தனர்.

அடங்கி அவதிப்பட வேண்டியதுதானா? யோசித்தேன்.

அடுத்த நிமிடம்...

திடீரென்று பயங்கர குமட்டல் சத்தத்துடன் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வாந்தி எடுப்பது போல நாலைந்து முறை சவுண்ட் கொடுத்தேன்.

அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த லுங்கிக்காரன் பதறிப் பாய்ந்து தூர ஓடினான் பதட்டத்தில் கீழே விழுந்துவிட்ட சிகரெட்டை எடுக்காமலேயே.

பஸ்சும் புகையை கக்கியபடி புறப்பட எனக்கு நிஜமாகவே வயித்தை குமட்டியது.


7 comments:

  1. ஹ ஹ ஹா

    நல்ல்லாயிருந்தது சார்

    ReplyDelete
  2. அவ்வப்போது நல்ல கதைகளைக் 'கக்க'றீங்க சார்! - கே. பி. ஜனா

    ReplyDelete
  3. @@JANARTHANAN

    என்ன இருந்தாலும் உங்களை மாதிரி பொருத்தமாக வார்த்தைகளை கக்க முடியாது சார்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  4. மிகவும் இரசித்தேன்! தொடருங்கள்!!

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "