என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, April 22, 2010

நம்பிக்கை



தினமும் வெளியே புறப்படும்போது தெரு முனை பிள்ளையார் கோயில் முன் காரை நிறுத்தி இறங்கி தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். "நீயும் வாயேண்டா! என்று காரிலிருந்த என் நண்பன் கார்த்திக்கை கூப்பிட்டேன். அவனோ "இல்லடா நீ போயிட்டு வா ! " என்றான்.

தரிசனம் முடித்து மீண்டும் காரை எடுத்தேன். பாதி வழி போகவில்லை. "நிறுத்து நிறுத்து " என்றான். என்ன ஏது என்று பார்த்தால் நடைபாதையிலிருந்த கிளி ஜோஸ்யரிடம் போய் உட்கார்ந்திருந்தான்.

மனைவி, மகன், மகள்னு ஒவ்வொருத்தரா சொல்லி கடைசியில் அவன் பெயரையும் சொல்லி ஜோஸ்யம் கேட்டுவிட்டுத்தான் காருக்குத் திரும்பினான்.

எனக்கு பொறுக்கவில்லை. "ஏண்டா கைரேகை, நியூமராலஜி, வாஸ்துன்னு என்னவெல்லாமோ இருக்குதே! அதையெல்லாம் விட்டுட்டு போயும் போயும் கிளி ஜோஸ்யம் பார்க்கறயே! "என்று கேட்டேன்.

" போடா எங்க நாலு பேருக்குமான பலன்களை வரிசையா சொல்ல சீட்டை எடுக்கறதுக்காக அந்த ஜோஸ்யக்காரன் கிளியை இருபது நிமிஷம் வெளியே சுதந்திரமா இருக்க விட்டானில்லே" அதுக்காகத்தாண்டா என்றான்.

நண்பர்கள் பட்டியலில் அவன் மிகவும் உயர்ந்தவனாக தெரிந்தான்.


அன்பை எப்போதும் ரகசியமாக வைத்திருக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்

10 comments:

  1. நறுக்கென்று ஒரு நல்ல சிறுகதை!

    ReplyDelete
  2. கருத்துள்ள கச்சிதமான கதை!

    ReplyDelete
  3. படிச்ச உடனே மனசு உங்க பிளாக்ல மாட்டிகிச்சு!

    ReplyDelete
  4. இதை ஏற்கனவே படித்த மாதிரி இருக்கிறது...

    எனிவே... வாழ்த்துகள்....

    ReplyDelete
  5. கவிதைகளிக் ஹைக்கு வகை என கேள்விப் பட்டிருக்கிறேன்.

    அதென்ன கதையில் ஒரு ஹைக்கு எழுதி கலக்கி விட்டீர்களே.

    பிரமாதம் நண்பரே....

    என்றாலும் வெறும் சுதந்திர காற்றும் ஒரு இரண்டு நெல் மணிகளும் பெற்று தருவதால் கிளி புண்ணியம் கிடைக்குமா.... ம்... டவுட்டுதாங்கோ

    ReplyDelete
  6. Nice story with a powerful message.really great

    ReplyDelete
  7. கிளிக்கு கொஞ்ச‌ நேரம் பெயிலில்
    வெளிவ‌ர‌ ப‌ண‌ம் க‌ட்டிய‌த‌ற்கு,
    கிளி ந‌ல்ல‌ சீட்டு எடுத்திச்சா?

    ReplyDelete
  8. ஒரு நல்ல சிறுகதை!

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "