1. வந்ததோ...
தூரத்தே மணியோசை!
ஆடி அசைந்து வருகிறதோ
பாகனுடன் யானை?
பார்த்ததுமே பரவசத்தில்
துள்ளிக் குதிப்பானே குழந்தை!
அவசரமாய் அவனை
தோளில் அணைத்துக் கொண்டு
தெரு முனைக்குப் போனால்...
மணியோசையுடன்
வந்து கொண்டிருந்தது
பஞ்சு மிட்டாய் வண்டி!
<><><><><><><><><><><><><><><>
2. இம்முறையேனும்...
வருவாயெனக் காத்திருந்தேன்
நீயோ வரவேயில்லை!
வந்த போது நான் உன்னைத்
தவிர்த்தது தவறுதான்
மன்னித்துவிடு!
மீண்டும் நீ வருவாயா என்று
துக்கத்துடன் காத்திருக்கிறேன்!
இம்முறை ஏமாற்றாதே
வா.. வா..வந்துவிடு...
என் இனிய தூக்கமே!
<><><><><><><><><><><><><><><>
(கட்டுரை.காம்-இல் வெளியான எனது கவிதைகள்)