1. வந்ததோ...
தூரத்தே மணியோசை!
ஆடி அசைந்து வருகிறதோ 
பாகனுடன் யானை?
பார்த்ததுமே பரவசத்தில் 
துள்ளிக் குதிப்பானே குழந்தை!
அவசரமாய் அவனை 
தோளில் அணைத்துக் கொண்டு
தெரு முனைக்குப் போனால்...
மணியோசையுடன் 
வந்து கொண்டிருந்தது 
பஞ்சு மிட்டாய் வண்டி! 
<><><><><><><><><><><><><><><>
2. இம்முறையேனும்... 
வருவாயெனக் காத்திருந்தேன் 
நீயோ வரவேயில்லை!
வந்த போது நான் உன்னைத்  
தவிர்த்தது தவறுதான்
மன்னித்துவிடு! 
மீண்டும் நீ வருவாயா என்று 
துக்கத்துடன் காத்திருக்கிறேன்!
இம்முறை ஏமாற்றாதே 
வா.. வா..வந்துவிடு...
என் இனிய தூக்கமே!
<><><><><><><><><><><><><><><>
(கட்டுரை.காம்-இல் வெளியான எனது கவிதைகள்)
