நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
(1972--ம் வருட கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை. ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை முற்றும் .)
ஒரு அந்தி வேளையில் நான் இந்த இடத்தை விட்டுப்
ரசித்த கவிதை-- 3
எவ்வளவு முயன்றும் என்னுருவை என்னால் மாற்றிக்கொள்ள
முடியவில்லை;
என் வாயும், கண்ணும்,மூக்கும், அப்படியேதான்
இருக்கின்றன.
இந்த உடலைத் தாங்கிக்கொண்டுதான் இரவும் பகலும்
அலைகிறேன்
சுவர்களில் என் நிழல் நகரும்போது பலரின் கண்கள்
புண்படுத்தப்படுகின்றன;
நான் யாருக்குச் சொந்தமானவன்?
என் தகப்பனும் பாட்டனும் என்னை நிராகரித்துவிட்டார்கள்
எந்த ஜீவராசியும் என்னைத் தங்கள் இனம் என்று
அங்கீகரிக்க இசையவில்லை; ஆனால்....
என்னை நானே துன்புறுத்திக் கதறும் போது மட்டும்,
காலம் என்னில் அழிக்க முடியாத தழும்பை விட்டுச்
செல்லும்போது மட்டும்;
அவர்கள் சொல்லுகிறார்கள்;
பரவாயில்லை, நன்றாய் இருக்கிறது
நான் சொல்லிக் கொள்கிறேன் நானும் மனிதனே!
(1972--ம் வருடம் வாங்கிய கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை தொடரும்.)
ரசித்த கவிதை-2 இருதயம்
எனக்குத் தெரியும்---
இருதயமே
நீ மிகவும் களைத்துப் போய்விட்டாய்
வாழ்க்கை மிகவும் கடினமாகி வருகிறது
ஒவ்வொன்றும் காலதாமதமாகித் தெரிகிறது
அறுபது ஆண்டுகளாய் நீ துடித்துக்
கொண்டிருக்கிறாய்.
நான் வாழ்கிறவரை
நீ மேலும் மேலும் துடிக்கத்தான் வேண்டும்
நாமிருவரும் ஒரே விதியைப் பகிர்ந்து கொள்ள
கட்டளையிடப்பட்டிருக்கிறோம்
நீ ஓய்வு பெறுவதற்கு உரிமை இருக்கிறது
ஜீரணிக்க முடியாத கனவுகளிலும், காதலிலும்
நீ பல வருஷங்கள் கஷ்டப்பட்டுவிட்டாய்
கடந்த காலத்தின் கவலைகளை மறந்துவிடு!
மேலும் மேலும் துடித்துக்கொண்டிரு!
நான் சொல்வதற்கும், பாடுவதற்கும் இன்னும்
நிறைய இரு...க்...கி...ன்...ற.........ன.
(இது நான் 1972--ம் வருடம்
வாங்கிய கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன். யார்
எழுதியது என்பதை குறித்து வைக்கவில்லை-- ரசித்த கவிதை தொடரும்.)
ரசித்த கவிதை-- 1